இயக்குநர் ஆனார் நடிகர் தனுஷ்! ராஜ்கிரண் கதாநாயகன்!
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘பவர் பாண்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு நடிகராக முத்திரை பதித்துவரும் தனுஷ், இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதன் அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘பவர் பாண்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரசன்னாவும் இதில் நடிக்கிறார். ஜோக்கர் படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்துக்கு இசையமைக்கிறார். தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். பவர் பாண்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது.
கொடி, வடசென்னை, எனை நோக்கிப் பாயும் தோட்டா, ஆங்கிலப் படம் என பல படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்தப் படத்தையும் தனுஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் அவர், தான் படம் இயக்க உள்ளதாக அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.