பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தில் நாயகியாக நயன்தாரா!
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 102-வது படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 102-வது படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
தற்போது பாலகிருஷ்ணா நடித்து வந்த ‘பைசா வசூல்’ திரைப்படம் செப்டம்பர் 1, 2017 அன்று திரைக்கு வரவிருப்பதால், தனது 102-வது படத்திற்கான வேலைகளில் பாலகிருஷ்ணா இறங்கியுள்ளார். தமிழ் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ‘ஸ்ரீ ராமராஜியம்’ மற்றும் ‘சிம்ஹா’ ஆகிய இரு படங்களும் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சி.கல்யாண் தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ஃபில்ம் சிட்டியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்படவுள்ள அரங்கில் நிகழ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் ‘ஜெய சிம்ஹா’ எனப் பெயர் சூட்டப் படக்குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.