முகப்பு
செய்திகள்

கேளிக்கை வரி: அரசிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்

கேளிக்கை வரிக்கு எதிரான திரையரங்கு உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்

Updated On : 3 ஜூலை 2017, 4:45 am IST
பகிர்:

கேளிக்கை வரிக்கு எதிரான திரையரங்கு உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம் என தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.
தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யர் கோரி தமிழகம் முழுவதும் சுமார் 1000}க்கும் மேற்பட்ட திரையரங்குகள் திங்கள்கிழமை முதல் மூடப்படுகின்றன. இந்த வேலைநிறுத்தத்தால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் சங்கத் தலைவர் விஷால் கூறியது: தமிழக அரசின் கேளிக்கை வரி என்பது திரையரங்கு உரிமையாளர்களுக்கு சுமையாக அமைந்துள்ளது. இதையொட்டி திரையரங்க உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் தமிழ் சினிமாவுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும். இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசிடமிருந்து திங்கள்கிழமை நல்ல முடிவு வரும் என காத்திருக்கிறோம். டிடிஹெச் மூலம் படங்களை வெளியிடும் திட்டம் தற்போது இல்லை.
தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையில் திரைப்படங்களை டிடிஹெச்சில் வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் லாபம் வரும் என்ற நிலை ஏற்பட்டால் அந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்றார்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments