முகப்பு
செய்திகள்

சென்னையில் உச்சபட்ச வசூல்: காலா படம் சாதனை!

காலாவுக்கு நிகராக சென்னையில் முதல் நாளன்று வேறு எந்தப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை...

Updated On : 8 ஜூன் 2018, 4:24 pm IST
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான காலா படம் சென்னையில் மட்டும் முதல் நாளன்று ரூ. 1.76 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வருடமாக இரு படங்கள் சென்னையில் முதல்நாளன்று அதிக வசூலை எட்டின. ஆகஸ்ட் 24 அன்று வெளியான அஜித் நடித்த விவேகம் படத்தின் முதல் நாள் சென்னை வசூல் - ரூ. 1.21 கோடி. பிறகு தீபாவளி சமயத்தில் வெளியான விஜய் நடித்த மெர்சல் படம் சென்னையில் முதல் நாளன்று ரூ. 1.52 கோடியை அள்ளியது. இந்நிலையில் தற்போது டிக்கெட் விலை அதிகமானதாலும் ரசிகர்களின் அதிக வரவேற்பினாலும் அவ்விரு படங்களின் வசூலைத் தாண்டியுள்ளது காலா படம். இந்தப் படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.76 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.12 கோடி வசூலித்தது.

Advertisement

Advertisement

காலாவுக்கு நிகராக சென்னையில் முதல் நாளன்று வேறு எந்தப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை. இந்தப் புள்ளிவிவரம் காலா படத்துக்கும் ரஜினி - பா.இரஞ்சித் ஆகிய இருவருக்கும் பெருமை சேர்த்துள்ளது. எனினும் முதல்நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments