இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் 70- வது பிறந்தநாள். டிசம்பர் மாதம் 12-ம் தேதி வந்துவிட்டால் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். குறிப்பாக நெட்டிசன்கள் ரஜினியின் படங்களை வைரலாக்குவதும், திரைப்பட வசனங்களை மீம்ஸ் போடுவதும், அவரது சூப்பர் ஹிட் பாடல்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைப்பதும், பிடித்த வசனங்களை ஷேர் செய்வதுமாக சமூக வலைத்தளங்களை அதகளப்படுத்திவிடுவார்கள். வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பின்ட்ரஸ்ட், என சர்வம் ரஜினிமயமாக இருக்கும்.
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும். உங்க பேரை ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் என்ற பாடல்தான் ஒவ்வொரு ரஜினி ரசிகருக்கும் தேசிய கீதம். இதைத் தொடர்ந்து படங்களில் அவர் பேசிய வசங்களை அவ்வப்போது சொல்லி மகிழ்வது ரஜினியிஸத்துக்கு அழகு. அவ்வகையில் காலத்தால் அழிக்க முடியாத சில பன்ச் வசனங்கள் இவை : (இது ஒரு சாம்பிள் தான், தலைவர் உதிருக்கும் ஒவ்வொரு சொல்லும் மந்திரம் என்று கூறும் வெறித்தன ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது).
படத்தில் தன் பெயரைச் சொல்லும் ஸ்டைச் பன்ச் இவை :
மல அண்ணாமலை (அண்ணாமலை)
பாட்ஷா - மாணிக் பாட்ஷா
அரசியல் பன்ச்சுகளுக்கு அளவில்லை, என்றாலும் மிகவும் பவுர்ஃபுல் பன்ச் இது
"நா எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" (முத்து)
"கண்ணா பன்னிதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்" (சிவாஜி)
"பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல...!" (சிவாஜி)
ரசிகர்களை குஷிப்படுத்தும் சில பன்ச் டயலாக்
"இது எப்படி இருக்கு....?" (16 வயதினிலே)
"சீவிடுவேன் சீவி...!" (முரட்டு காளை)
"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" - (பாட்ஷா)
"கஷ்டபடாம எதுவும் கிடைக்காது; கஷ்டபடாம கிடைச்சது என்னிக்குமே நிலைக்காது" (அண்ணாமலை)
"என் வழி... தனி... வழி" (படையப்பா)
"நல்லவனா இருக்கலாம் ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது...!" (பேட்ட)