இன்று வெளியாகியுள்ள என் படத்தை அனைவரும் கண்டுகளியுங்கள்: காயத்ரி ரகுராம் வேண்டுகோள்!
காயத்ரி ராகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று வெளியாகியுள்ளது.
காயத்ரி ராகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று வெளியாகியுள்ளது.
காயத்ரி ரகுராம் நடித்து இயக்கியுள்ள படம் - யாதுமாகி நின்றாய். கதாநாயகியாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர், சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையைப் படமாக எடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இசை - அஸ்வின் வினாயக மூர்த்தி.
பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போன நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் யாதுமாகி நின்றாய் படம் இன்று வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி காயத்ரி ரகுராம் கூறியதாவது:
ஓர் இயக்குநராக இது என்னுடைய முதல் குழந்தை. உங்களுக்கு நேரம் இருக்கும்போது அனைவரும் கண்டுகளியுங்கள். நான் பார்த்த என் மனத்துக்கு நெருக்கமான கதை இது என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.