‘விரைவில் தென்னிந்திய சினிமாவில் நடிக்க உள்ளேன்’- ஸ்ரீதேவியின் மகள் அதிரடி!
விரைவில் தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.
கடந்த சில வருஷங்களாகவே தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பேன் என கூறிவருகிறார் ஜான்பி கபூர். இவர் மறைந்த பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகை ஸ்ரீதேவியின் மகள். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் ஆவார்.
நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தார். 25 வயதான இவர் சென்னையில் நிக்ழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது இவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அடுத்த படங்கள் குறித்து கேட்கப்பட்டது. பவால் விரைவில் ரிலீஸாக உள்ளது. அடுத்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஷ். விரைவில் தென்னிந்திய படங்களில் நடிப்பேன்” என கூறியுள்ளார்.
மேலும் விரிவாக இதைப்பற்றி கூறவில்லை. ஆனால் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். விஜய் தேவரகொண்டா, ராம்சரண் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போதைய தகவலின்படி ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் தனது முதல் தென்னிந்திய படமாக இருக்கலாம் என தெரிகிறது.
Related Article
புலி வால் பிடித்து விடியோ வெளியிட்ட நடிகருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது!
'மைக்கேல்' படத்தின் புதிய அப்டேட்!
‘நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை. அப்போ இதென்ன?’ - ரசிகர்கள் கிண்டல்!
அஜித்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து கேலிக்குள்ளான நடிகர்!
இரும்புப் பெண் சமந்தா: நடிகரின் அன்புப் பரிசு!