செய்திகள்

திருமணம் செய்ய வற்புறுத்தாதீர்கள்: பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்த சிம்பு! 

DIN

திருமணம் செய்துகொள்ளும்படி எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வற்புறுத்தாதீர்கள் என நடிகர் சிம்பு கோரிக்கை வைத்துள்ளார்.  

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார். தரை வழியாக வருவதாகவே இருந்தேன். தயாரிப்பு நிறுவனம்தான் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். இவ்விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது: 

வாழ்க்கையில் திடீரென யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இரண்டு நபர்கள் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுத்த பிறகு அவர்களே திருமணம் செய்து கொள்வார்கள். நாம் அதை மதிக்க வேண்டும். இந்த நேரத்தில், உங்களது மகன் மகள்களை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தாதீர்கள் என அனைத்து பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 

சமூகத்தின் அழுத்தம் காரணமாக தவறான திருமணங்கள் நடைபெறுகிறது. முதலில் அவர்களை அவர்களது வாழ்க்கையை வாழ விடுங்கள். அவர்களுக்கு ஏற்றவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளட்டும். எல்லாவற்றுக்கும் மேல் கடவுள் இருக்கிறார். அவர் சரியான நேரத்தில் சரியான நபரை அனுப்புவார். அதுவரை அமைதியாக இருப்பது சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT