முகப்பு
செய்திகள்

மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்

மக்களும் கடவுளும் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். 

Updated On : 13 டிசம்பர் 2022, 9:51 pm IST
பகிர்:

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட்  படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியிருந்தனர்.  இந்தப் படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்நிலையில், கோவை பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழாவில் லெஜண்ட் சரவணன் பங்கேற்றார். இங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது: 

சென்னையை போலவே கோவையும் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. எனது அடுத்தப் படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  மக்களும், மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். இப்போதைய ஆட்சி சிறப்பாகவே நடைபெறுகிறது. 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments