பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபல நடிகை!
பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று பிரபல நடிகை வருகையால் போட்டியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று பிரபல நடிகை வருகையால் போட்டியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் நானிமேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | 'மாஸ்டர் மாதிரி இருக்காது...' அஜித் படம் குறித்து விக்னேஷ் சிவன்!
இந்நிலையில், 12-வது வாரம் தொடங்கியுள்ள நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களும் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்த ‘ஃப்ரீஸ், ரிலீஸ்’ டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று வருகிறது.
முதல் நாளான நேற்று, மைனா நந்தினி, அமுதவாணன் மற்றும் சிவினின் உறவினர்களும் நண்பர்களும் வருகை தந்து அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில் ரச்சிதாவின் தாயும், இரண்டாவது ப்ரோமோவில் மணிகண்டாவின் தாய், மனைவி, மகன் மற்றும் சகோதரி வருவது இடம்பெற்றுள்ளது.
மணிகண்டாவின் சகோதரி பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவார். அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழில் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை, தர்மதுரை, கனா, க.பெ.ரணசிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், பிக்பாஸ் போட்டியின் டிரெண்டிங் ஸ்டார்களான அஷீம் மற்றும் விக்ரமனின் குடும்பத்தாரின் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.