முகப்பு
செய்திகள்

ஜெயம் ரவி - நயன்தாராவின் ’இறைவன்' படப்பிடிப்பு நிறைவு

ஜெயம்ரவி நடிப்பில் உருவான ‘இறைவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Updated On : 2 நவம்பர் 2022, 1:01 pm IST
பகிர்:

ஜெயம்ரவி நடிப்பில் உருவான ‘இறைவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக நடைபெற்று வந்தது.

Advertisement

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

‘இறைவன்’ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.