பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பயணம்
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன் பணிகளுக்காகப் படக்குழுவினர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காகப் படக்குழுவினர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது.
மேலும், இப்படத்தின் பாடல்கள் அனைத்து லிரிக்கல் விடியோ வெளியான நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காகப் படக்குழு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்து செப்.22 ஆம் தேதி பெங்களூரு செல்ல உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.