செய்திகள்

சன் டிவியின் பிரபல சீரியல் நிறைவடைகிறது?

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணான கண்ணே சீரியல்  நவம்பர் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் மற்றும் ராகுல் ரவி மற்றும் பப்லு ப்ரிதிவிராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் தெலுங்கு தொலைக்காட்சி தொடரான பௌர்ணமியின் ரீமேக் ஆகும்.

கண்ணான கண்ணே என்ற முகப்பு பாடலுக்கு 'ஜி கே வி' என்பவர் வரிகள் எழுத பிரபல பாடகி சித்ரா என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு 'சாம்' என்பவர் இசை அமைத்துள்ளார்.

தந்தை - மகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சில நாள்களுக்கு முன்னர், 700வது எபிசோடை எட்டியதாக சீரியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கண்ணான கண்ணே சீரியல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரோஜா தொடர் நிறைவடைந்த நிலையில், கண்ணான கண்ணே தொடர்  நிறைவடைவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT