விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம்: சிவகார்த்திகேயன்
நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க விருப்பப்படுவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியான 4 நாள்களில் உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் குறைந்த நாள்களில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த(ரூ.35 கோடி) திரைப்படமாகவும் மாவீரன் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மறுவெளியீட்டில் வேட்டையாடு விளையாடு வசூல் இவ்வளவா?
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மடோன் அஷ்வின், ‘மாவீரன் திரைப்படத்திற்கு பின்னணிக் குரல் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி சம்பளமாக ஒரு ரூபாயைக் குட பெறவில்லை.’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், ‘எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே போட்டியிருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையில்லை. நான் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடிக்க விருப்பப்படுகிறேன். விரைவில் அது நடக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.