நடிகை த்ரிஷா 
செய்திகள்

எனது மகன் இறந்துவிட்டான்.. த்ரிஷா பகிர்ந்த சோகச் செய்தி!

எனது மகன் இறந்துவிட்டான் என நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

DIN

எனது மகன் இறந்துவிட்டான் என்று நடிகை த்ரிஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்.

நடிகை த்ரிஷா, ஜோரோ என்று பெயரிடப்பட்ட நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அவ்வப்போது அதனுடன் நேரத்தை செலவிடுவதும் வழக்கம்.

திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறந்துவந்தாலும், படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும்போது ஜோரோவுடன்தான் இருப்பார். அது தொடர்பான புகைப்படங்களும் ஊடகங்களில் வரவியிருந்தது.

அதாவது, டிச.25 அதிகாலையில், அவர் வளர்த்து வந்த ஜோரோ, உயிரிழந்துவிட்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என் மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். நானும் எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்துபோயுள்ளோம். சிறிது காலம் பணியில் இருந்து விலகியிருக்க உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஜோரோவின் புகைப்படம் மற்றும் அது புதைக்கப்பட்ட இடத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT