முகப்பு
செய்திகள்

டிமான்டி காலனி - 3 பணிகள் துவக்கம்!

டிமான்டி காலனி மூன்றாம் பாகம் குறித்து...

Updated On : 30 டிசம்பர் 2024, 11:26 am IST
பகிர்:

டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்துக்கான பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2 திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வணிக ரீதியாக ரூ. 80 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாகவும் அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.