முகப்பு
செய்திகள்

12 நாளில் ரூ.12 கோடி: வெற்றி விழா கொண்டாடிய ‘பிடி சார்' படக்குழு!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் திரைப்படம் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது

Updated On : 5 ஜூன் 2024, 5:56 pm IST
பகிர்:

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ’பி.டி. சார்’ என்ற படம் மே 24 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

இதன் வெற்றி விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் படக்குழு, “பிடி சார் திரைப்படம் 12 நாளில் ரூ.12.5 கோடி வசூலித்துள்ளது. இன்னமும் பல திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது” என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

இப்படத்தில் காஷ்மிரா பர்தேசி, பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.