12 நாளில் ரூ.12 கோடி: வெற்றி விழா கொண்டாடிய ‘பிடி சார்' படக்குழு!
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் திரைப்படம் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ’பி.டி. சார்’ என்ற படம் மே 24 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
இதன் வெற்றி விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் படக்குழு, “பிடி சார் திரைப்படம் 12 நாளில் ரூ.12.5 கோடி வசூலித்துள்ளது. இன்னமும் பல திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது” என படக்குழு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தில் காஷ்மிரா பர்தேசி, பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.