செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படப்பிடிப்பு எப்போது முடியும்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாள்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த்.வி என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமரன் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.60 கோடி கொடுத்துப் பெற்றதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், புதுச்சேரியில் 30 நாள்களாக தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு மீதமிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இதற்கடுத்து வெளியீட்டுக்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT