சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படப்பிடிப்பு எப்போது முடியும்?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாள்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த்.வி என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமரன் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.60 கோடி கொடுத்துப் பெற்றதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், புதுச்சேரியில் 30 நாள்களாக தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு மீதமிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இதற்கடுத்து வெளியீட்டுக்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.