விஜய் தேவரகொண்டா - சாய் பல்லவி 
செய்திகள்

விஜய் தேவரகொண்டா - சாய் பல்லவி பட படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் பதில்!

நடிகர் விஜய் தேவரகொண்டா சாய் பல்லவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியுள்ளார்.

DIN

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா 12:

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இது விடி12 என பெயரிடப்பட்டுள்ளது.

நானி நடிப்பில் அனிருத் இசையில் கௌதம் தின்னானுரி இயக்கிய ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

விஜய் தேவரகொண்டா இதற்கிடையில் விஜய் தேவரகொண்டாவின் 13ஆவது படமாக அறிவித்த பேமிலி ஸ்டார் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா 14:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ராகுல் சங்கராதியன் இயக்குகிறார். வரலாற்று திரைப்படமாக இது உருவாகுவது குறிப்பிடத்தக்கது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா - சாய் பல்லவி:

மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். நாயகியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ ஆங்கில ஊடகத்த்துக்கு அளித்த நேர்காணலில் , “அடுத்தாண்டு ஏப்ரலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும். விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி. விஜய் தற்போது முழுக்க முழுக்க கமர்ஷியல் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

நடிகை சாய் பல்லவி அமரன் படத்தில் நடித்துவிட்டு தண்டேல் படத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT