இயக்குநர் ராகுல் ரவீந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படம் குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கிய தி கேர்ள்பிரண்ட் என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மமூட்டி கம்பெனி தயாரிப்பில் களம்காவல் எனும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகைகள் பலர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்தப் படம் நேற்று (டிச.5) திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படம் குறித்து இயக்குநர் ராகுல் ரவீந்திரன் கூறியதாவது:
மம்மூட்டி சார்...எப்படி சார்... என்ன சார்... ஏன் சார் 🙏🏾🙏🏾🙏🏾🙌🏽🙌🏽🙌🏽🙌🏽. என்ன ஒரு மனிதன்... என்ன ஒரு நடிகர்.... என்ன ஒரு நட்சத்திரம்... என்ன ஒரு தயாரிப்பாளர்! களம்காவல் ஒரு அற்புதம்! இந்தப் படத்தில் மூழ்கிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.