அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!
மஞ்ஞுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் அடுத்த படம் குறித்து...
மஞ்ஞுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
பாலன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தாண்டு ஆகஸ்ட்டில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (டிச.6) முடிவடைந்தது.
Advertisement
ஆவேஷம், ரோமஞ்சம் படத்திற்கு கதை எழுதிய ஜித்து மாதவன் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் மற்றும் தேஸ்பியன்ஸ் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
summary