அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!
மஞ்ஞுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் அடுத்த படம் குறித்து...
மஞ்ஞுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
பாலன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தாண்டு ஆகஸ்ட்டில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (டிச.6) முடிவடைந்தது.
Advertisement
Advertisement
ஆவேஷம், ரோமஞ்சம் படத்திற்கு கதை எழுதிய ஜித்து மாதவன் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் மற்றும் தேஸ்பியன்ஸ் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
Manjumel Boys director Chidambaram has completed the shooting of his next film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.