பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநரின் புதிய சீரியல்!
இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய சீரியல் குறித்து...
பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நம்ம வீட்டு பொண்ணு, வீட்டுக்கு வீடு வாசப்படி உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கியவர் பிரவீன் பென்னட்.
இவர் இயக்கும் தொடர்களைப் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் இயக்கும் தொடர்கள் எப்போதும் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும். இவர் தற்போது மகாநதி தொடரை இயக்கி வருகிறார். இத்தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இயக்குநர் பிரவீன் பென்னட் புதிய தொடரை இயக்குகிறார். இத்தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா, கனா தொடர் நாயகி தர்ஷனா, நீ நான் காதல் நாயகன் பிரேம் ஜேக்கப் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தற்போது குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் மகாநதி, அய்யனார் துணை ஆகிய தொடர்களை தயாரித்து வரும் நிலையில், இப்புதிய தொடரையும் தயாரிக்கிறது. இத்தொடருக்கான வசனங்களை பிரியா தம்பி எழுதுகிறார்.
நடிகை அன்ஷிதாவை மீண்டும் தொடரில் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் புதிய தொடரின் பூஜை அண்மையில் நடைபெற்றுள்ளது. இத்தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தொடர் குழுவினர் பலர் பங்கேற்றுள்ளனர்.
எனினும், இத்தொடருக்கான பெயர், ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.