பாராட்டுகளைப் பெறும் பாக்யஸ்ரீ போர்ஸ்!
காந்தாவில் பாக்யஸ்ரீ நடிப்பு கவனம் பெற்றுள்ளது...
காந்தா திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கில் வளர்ந்துவரும் நடிகையாக உள்ளார். இவர் ஹிந்தியில் யாரியான் - 2 படம் மூலமே நடிகையாக சினிமாவுக்கு அறிமுகமானவர். நடிப்பாற்றலுடன் கூடிய அழகான தோற்றத்தால் பாக்யஸ்ரீக்கு தெலுங்கில் மிஸ்டர் பச்சான் மற்றும் கிங்டம் படங்களில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது.
தற்போது, காந்தா மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். இதில், நடிகையாகவும் துல்கரின் காதலியாகவும் நடித்திருக்கிறார்.
Advertisement
Advertisement
திரையரங்குகளில் வெளியான காந்தா கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால், இப்படத்தில் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்புக்கு கவனம் கிடைத்துள்ளது.
மேலும், நாயகியான பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைய படங்களில் நடிக்காமலேயே குமாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதனால், பாக்யஸ்ரீ போர்ஸ் அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அஜித் பட பாடலைப் பாடிய பிகாரின் இளம் எம்எல்ஏ!
actor bhagyashri borse get good response from fans for her kaantha movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.