சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!
இனி திரைப்படங்களைத் தயாரிக்கப் போவதில்லை என வெற்றி மாறன் அறிவிப்பு...
இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படங்களைத் தயாரிப்பதை நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமான உதயம் என்எச்4 வெற்றிப்படமானது.
தொடர்ந்து, நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தார். சில திரைப்படங்கள் லாபகரமாக அமைந்தது.
Advertisement
Advertisement
ஆனால், இறுதியாக வெற்றிமாறன் தயாரித்த மனுசி, பேட் கேர்ள் ஆகிய திரைப்படங்கள் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்தது. இதில், பேட் கேர்ள் வருகிற செப். 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், “ஒரு தயாரிப்பாளராக இருந்தால் படம் பேசவரும் கருத்துகளுக்கான எதிர்வினைகளையும் சந்திக்க வேண்டும். இது படத்தின் வணிகத்தையும் பாதிக்கும் என்பதால் தயாரிப்பாளராக இருப்பது அழுத்தம் தரக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே, மனுசி நீதிமன்ற சிக்கலைச் சந்தித்தது. இனி என்ன பிரச்னை வரப்போகிறது எனத் தெரியவில்லை. பேட் கேர்ள் திரைப்படமும் தணிக்கைக்குச் சென்று 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என்கிற சான்றிதழைப் பெற்றுள்ளது.
எங்களைப் போன்றவர்கள் சிறிய தயாரிப்பாளர்கள் என்பதால் கடன் பெற்றுத்தான் திரைப்படங்களைத் தயாரிக்கிறோம். இது சவாலாக இருக்கிறது. இதனால், பேட் கேர்ள் திரைப்படம்தான் என் கடைசி தயாரிப்பு என்கிற முடிவை எடுத்திருக்கிறேன். இனிமேல், கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி திரைப்படங்களைத் தயாரிக்காது. கடையை இழுத்து மூடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
வெற்றி மாறனின் இப்பேச்சு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. முற்போக்கான சிந்தனைகள் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்தால், அதற்கு எதிரானவர்களால் படமும் அதன் வணிகமும் பாதிக்கப்பட்டு வெற்றி மாறன் போன்றவர்களையே தயாரிப்பிலிருந்து விலகச் செய்துள்ளதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?
director vetri maaran plan to stop producing films under his grassroot film company production
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.