மீண்டும் லெஜண்ட் சரவணனை இயக்கும் துரை செந்தில்குமார்!
லெஜண்ட் சரவணனுடன் மீண்டும் இணையும் துரை செந்தில்குமார்..
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் மீண்டும் நடிக்கவுள்ளார்.
லெஜண்ட் சரவணன் - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவான லீடர் திரைப்படம் வருகிற ஏப். 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அதிரடி ஆக்சன் திரைப்படமான இதன் டீசர், டிரைலர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பெரிய வரவேற்பு இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து, மூன்று கதாபாத்திரங்களில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளார். இது பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய துரை செந்தில்குமார், “லீடர் திரைப்படத்தைப் பார்த்த சரவணன் மிகவும் பிடித்திருந்ததாக என்னைப் பாராட்டினார். மேலும், அவரை வைத்து இன்னொரு திரைப்படம் இயக்குவதற்கும் முன்பணம் கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், மீண்டும் லெஜண்ட் சரவணனை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.