சேப்பாக்கம் திடலில் அதிர்ந்த அனிருத் பாடிய ராவண மவன்டா பாடல்!
சேப்பாக்கம் கிரிக்கெட் திடலில் அனிருத் பாடிய விஜய்யின் பாடல் குறித்து...
சேப்பாக்கம் திடலில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய விஜய்யின் ராவண மவன்டா எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்தப் பாடல் நடிகர் விஜய் கடைசியாக நடித்து, இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத ’ஜன நாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேப்பாக்கில் விஜய் பாடல்
Advertisement
Advertisement
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவும் ஜிம்பாப்வே அணியும் நேற்று (பிப்.26) சென்னையிலுள்ள சேப்பாக்கம் திடலில் மோதின. இதில், இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. தனது இசையில் உருவான பல பாடல்களை அனிருத் பாடினார். அந்த வரிசையில் அவர் பாடிய ’ராவண மவன்டா’ எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்தப் பாடலுக்கு சேப்பாக்கம் திடலில் இருந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் அடைந்தார்கள். இந்த விடியோ இணையத்தில் வைரலானது.
சேப்பாக்கில் தடை செய்யப்பட்ட விசில்
இந்த உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியது.
அடுத்த சில போட்டிகளிலேயே சேப்பாக்கில் விசில் தடைசெய்யப்பட்டதால் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.
பின்னர், ஐசிசி தடைசெய்யப்பட்ட பொருள்கள் பட்டியலில் விசிலும் இருப்பதாக பேனர்கள் திடலுக்கு முன்பாக வைக்கப்பட்டது.
ஏற்கெனவே, இந்த டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் பாடல் இயற்றியதும் குறிப்பிடத்தக்கது.
Vijay's song Ravana Mavanda, sung by composer Anirudh at the Chepauk stadium, went viral on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.