இளையராஜா எழுதிய ஏடேறும் எழுத்து நூல் வெளியீடு!
இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய நூல் வெளியீடு....
இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய ஏடேறும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தன் 83-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சினிமாவிலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டு என்பதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்து தெரிவிக்க பல பிரபலங்கள் இளையராஜா ஸ்டூடியோவுக்கு சென்றபடியே இருக்கின்றனர். இந்த நிலையில், இளையராஜா கைப்பட எழுதிய, “ஏடேறும் எழுத்து” என்கிற தன் அனுபவ நூலை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதில், தான் சந்தித்த மனிதர்கள், உறவுகள், இக்கட்டான காலகட்டங்கள் என பலவற்றைப் பதிவு செய்துள்ளதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலைக் கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பித்துள்ளனர்.
நடிகர் தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க இருந்தது. இது அதற்காக, எழுதப்பட்ட நூலாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ederum ezhuthu book written by music composer Ilaiyaraaja, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.