இளையராஜா எழுதிய ஏடேறும் எழுத்து நூல் வெளியீடு!
இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய நூல் வெளியீடு....
இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய ஏடேறும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தன் 83-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சினிமாவிலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டு என்பதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்து தெரிவிக்க பல பிரபலங்கள் இளையராஜா ஸ்டூடியோவுக்கு சென்றபடியே இருக்கின்றனர். இந்த நிலையில், இளையராஜா கைப்பட எழுதிய, “ஏடேறும் எழுத்து” என்கிற தன் அனுபவ நூலை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதில், தான் சந்தித்த மனிதர்கள், உறவுகள், இக்கட்டான காலகட்டங்கள் என பலவற்றைப் பதிவு செய்துள்ளதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலைக் கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பித்துள்ளனர்.
நடிகர் தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க இருந்தது. இது அதற்காக, எழுதப்பட்ட நூலாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.