சாய்பாபா கோவிலில் திருமண நாளைக் கொண்டாடிய கனிகா!
18 ஆண்டுகளுக்கு முன்பு மணமேடையில் கணவருடன் மாலை மாறிக்கொண்டதைப்போல, சாய்பாபா முன்பு மாலை மாற்றிக்கொண்ட நடிகை கனிகா...
நடிகை கனிகா தனது திருமண நாளை சாய்பாபா கோயிலில் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு மணமேடையில் கணவருடன் மாலை மாறிக்கொண்டதைப்போல, சாய்பாபா முன்பு மாலை மாற்றிக்கொண்டு திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர்.
அடிக்கடி சாய்பாபா கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நடிகை கனிகா, சமீபத்தில் விஜய்யின் சீரடி வருகையின்போதும் சாய்பாபா கோயிலுக்கு வந்திருந்தார். விஜய்யுடன் சீரடியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
தற்போது 18 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி சாய்பாபா கோயிலுக்கு, குடும்பத்துடன் கனிகா சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
மணிரத்னம் தயாரிப்பில் உருவான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கனிகா, தென்னிந்திய சினிமாவின் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.
மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி போன்ற நட்சத்திர நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். பின்னர் சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார்.
பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகினார். தனது மகன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, அவனுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தொடரில் இருந்து விலகினார்.
சின்ன திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றுவந்த கனிகா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். தற்போது தனது கணவருடன் 18 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
சாய்பாபா கோவிலில் தனது கணவருடன் பரஸ்பரம் மாலை மாற்றிக்கொண்டு வழிபாடு செய்தனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக கனிகா பதிவிட்டுள்ளார். கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
கனிகாவின் திருமண நாளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Actress Kaniha celebrate anniversary with husband in saibaba temple viral photos
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.