சனாதன தர்மம் மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை... அர்ஜுனின் வைரல் பேச்சு!
நடிகர் அர்ஜுன் சனாதன தர்மம் குறித்து பேசியிருப்பதாவது...
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் சனாதன தர்மம் குறித்து அர்ஜுன் பேசியிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிளாஸ்ட் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அர்ஜுன், “சனாதன தர்மம் மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” எனக் கூறியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக இருந்த சுபாஷ் கே ராஜ் அறிமுக இயக்குநராக ’பிளாஸ்ட்’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன், நடிகைகள் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
பிளாஸ்ட் திரைப்படம் நேற்று (மே.29) திரையரங்குகளில் வெளியாகியது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது அர்ஜுன் கூறியிருப்பதாவது:
சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை. நாம் வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லுவது. தப்பு செய்யக்கூடாது, திருடக்கூடாது, இன்னொருவர் பொருள்கள் மீது ஆசைப்படாதே என்பதும் சனாதன தர்மம் கூறுகிறது.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது தாய் தந்தையர் எவ்வளவு அழகாக பார்த்துக்கொண்டார்கள். அதேபோல் நாமும் வயதான காலங்களில் அவர்களை கடவுள்போல பார்த்துக்கொள்ள வேண்டுமென சனாதன தர்மம் கூறுகிறது.
சனாதன தர்மம் இருக்கக்கூடாதென்றால் அவர்களது அம்மா அப்பாவை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட வேண்டும். முடியுமா? சனாதன தர்மம் என்பது மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. எனக்குத் தெரிந்த அளவுக்குச் சொல்கிறேன். அனைவரும் இதனைப் புரிந்துகொண்டால் நல்லது என்றார்.