காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்கிய தஞ்சை என் கோபால்சாமி ஐய்யங்கார் குறித்து நேற்றைய தினம் ஊடகங்கள் நினைவு கூர்ந்தன. பாரதப் பிரதமராக பண்டித நேரு இருந்த காலகட்டத்தில் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளும் திறமையான அரசியல் தலைவராக அடையாளம் காணப்பட்டவர் என் ஜி ஐய்யங்கார். அவருக்கும் நேருவுக்குமான நட்பு என்பது மிக மிக ஆத்மார்த்தமானது. அதனால் தான் என் ஜி ஐய்யங்காரின் மறைவை ஒட்டி நேரு வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ‘அவரது மறைவு எனக்கு நேர்ந்த சொந்த இழப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துணை புகழ் வாய்ந்த திறமையாளர்களை இந்திய அரசியல் அரங்கில் மீண்டும் அடையாளம் காண்பதென்பது சற்றுக் கடினமான காரியம் தான்.
என் ஜி அய்யங்காரின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கும் போது அவரெடுத்த முடிவுகள் அனைத்துமே மிக்க ராஜதந்திரம் நிறைந்தவையாக இருந்ததோடு நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஹாங்காங் புரட்சியின் ஆக்ரோஷத் தருணங்கள்! (காணொலி)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட உத்தரவை ஒட்டி (15/05/1954) தினமணியில் வெளிவந்த தலையங்கம்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசியக்கொடி ஏற்றம்
மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு: 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம்
சுஷ்மா மறைவு: தில்லியில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.