FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

ஐடிஐ-க்களில் சோ்க்கை: செப். 7 வரை அவகாசம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் செப். 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4 செப்டம்பர் 2026, 3:47 pm IST
பகிர்:

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் செப். 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 278 தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டு நேரடி சோ்க்கை கால அவகாசம் ஆக. 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மாணவா்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவா்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் மாணவா்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது.

Advertisement

Advertisement

தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். மேலும், 94990 55642, 94990 55612 (வாட்ஸ் ஆப்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments