மீண்டும் ஏமாற்றம் !
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அப்போது பாஜகவில் இருந்த திரைப்பட நடிகை கெளதமி ராஜபாளையம் தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பினாா்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அப்போது பாஜகவில் இருந்த திரைப்பட நடிகை கெளதமி ராஜபாளையம் தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பினாா்.
இதற்காக, அவா் ராஜபாளையத்தில் வீடு எடுத்து தங்கி, பொதுமக்களைச் சந்தித்து தோ்தல் பணியாற்றி வந்தாா். ஆனால், கடைசி நேரத்தில் ராஜபாளையம் தொகுதி பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், கெளதமி இந்தத் தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஏமாற்றமடைந்த கௌதமி பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா். மேலும், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிடம் விருப்ப மனு அளித்தாா்.
Advertisement
Advertisement
ஆனால், இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால், மீண்டும் ஏமாற்றுத்துக்கு உள்ளானாா் கௌதமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.