தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு சென்னை கன்டோன்மெண்ட் போர்ட்டில் வேலை
சென்னை கன்டோன்மெண்ட் போர்ட்டில் நிரப்பப்பட உள்ள ஆயா வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
சென்னை கன்டோன்மெண்ட் போர்ட்டில் நிரப்பப்பட உள்ள ஆயா வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆயா (மகளிர்)
காலியிடங்கள்: 2 இதில் 1 இடம் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மருத்துவ நிறுவனங்களில் பணி செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கான இடத்திற்கு 25 வயதுக்குள்ளும், எஸ்சி. பிரிவினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.200. இதனை சென்னையில் மாற்றத்த வகையில் "Chief Executive Officer, Cantonment Board, St. Thomas Mount" என்ற டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cbstm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief Executive Officer, Cantonment Board, North Parade Road, St. Thomas Mount, Chennai - 600016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 18.08.2018 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். தொலைதூரப் பகுதிகளில் வரும் விண்ணப்பங்கள் 25.08.2018 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.