சென்னை மாவட்ட புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
வேலைவாய்ப்பு

ரூ.58,500 சம்பளத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி!

சென்னை மாவட்ட புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

சென்னை மாவட்ட புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சமையலர்(Cook) - 1

சம்பளம்: மாதம் ரூ. 15,900 - 58,500

வயதுவரம்பு: 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையலர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: லாரி ஓட்டுநர் (Lorry Driver) - 1

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 71,900

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: நெசவு பேதகர் (Weaving Instructor) -1

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 71,900

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழக அரசின் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை - 1, புழல், சென்னை - 66, தொலைபேசி : 044-26590615.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

முளைப்புத்திறன் குறைவாக உள்ள விதைகளை விற்றால் நடவடிக்கை: விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

பல்லடம் தொகுதியை இரண்டாக பிரிக்க தமாகா கோரிக்கை

SCROLL FOR NEXT