சென்னை ஐசிஎப்-ல் தொழில்பழகுநர் பயிற்சி: காலியிடங்கள் 1,010
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு kg
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் ‘வந்தே பாரத்’, ‘அம்ரூத் பாரத்’, எல்எச்பி ரயில்களுக்கான பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் 1961-ஆம் ஆண்டு தொழிற்பயிற்சிச் சட்டத்தின் கீழ் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி: தொழில்பழகுநர் (Apprentices)
காலியிடங்கள்: 1,010
Advertisement
Advertisement
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்காலம்.
வயது வரம்பு: ஐடிஐ முடித்தவர்கள் 15 முதல் 24 வயதிற்குள்ளும்; ஐடிஐ அல்லாதவர்கள் 15 முதல் 22 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பயிற்சி அளிப்படும் இடம்: சென்னை பெரம்பூர்
ஊக்கத்தொகை: பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8,200, மற்றவர்களுக்கு மாதம் ரூ.9,600 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://pb.icf.gov.in/act2026/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.9.2026
ONLINE applications are invited from eligible candidates for engagement as Act Apprentices for imparting training under the....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.