ஆவடி பாதுகாப்பு வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஜேஆர்எப் பணி
ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்றைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை அடுத்த ஆவடி பாதுகாப்பு வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (சிவிஆர்டிஇ) ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்றைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CVRDE/HR/JRF/2026-27
பணி: Junior Research Fellow
Advertisement
Advertisement
பிரிவு : Mechanical Engineering
காலியிடங்கள்: 7
பிரிவு: Electrical and Electronics Engineering
காலியிடங்கள் : 2
பிரிவு: Electronics and Communication Engineering
காலியிடங்கள்: 5
பிரிவு: Computer Science & Engineering
காலியிடங்கள்: 2
சம்பளம் : மாதம் ரூ. 37,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் மேற்கண்ட பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Combat Vehicles Research & Development Establishment (CVRDE), Min. of Defence, DRDO, Avadi, Chennai-600 054.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 10.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
DRDO Recruitment for the post of Junior Research Fellowship
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.