குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!
தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாகவுள்ள வழக்கு பணியாளர் பணி குறித்து...
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வழக்கு பணியாளர்
காலியிடம்: 1
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பிளஸ் 2 முடித்திருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 42- க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் தபால் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tenkasi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 14, செவன்த்டே பள்ளி அருகில், தென்காசி - 627 811.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 21.5.2026
Applications are invited for the post of Case Worker for contract Basis in the Tenkasi Child Helpline...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.