முகப்பு
நிகழ்வுகள்

கோர தாண்டவமாடி கரையை கடந்தது மாண்டஸ் புயல் - புகைப்படங்கள்

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

Updated On : 10 டிசம்பர், 2022 at 10:34 PM
மாண்டஸ் புயல் காரணமாக, இரவு பெய்த மழையால் எழும்பூா் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் மெதுவாகச் சென்ற வாகனங்கள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:30 PM
மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூரில் ஆா்ப்பரித்து காணப்பட்ட கடல் அலை.
மாண்டஸ் புயலால், சென்னை சீனிவாசபுரத்தில் கரையோர குடியிருப்பு பகுதிகளில் புகுந்த கடல்நீா்.

Advertisement

மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக சென்னை மெரீனாவில் எழுந்த ராட்சத கடல் அலைகளால் சேதமடைந்த அண்மையில் திறந்துவைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை.
மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயலின் தாக்கம்
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்ந்து மழைநீர் தேங்கிய பாதை வழியாக மக்கள் நடந்து செல்கின்றனர்.
எம்எம்டிஏ காலனியில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
மாண்டஸ் புயலால் சென்னை எழும்பூர் பகுதியில் வேரோடு சாய்ந்த மரம்.
மாண்டஸ் புயலால் சென்னை தி.நகரில் பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது.
மழைநீர் தேங்கியதால் கடல் போல காட்சியளிக்கும் மெரினா கடற்கரை.
தொடர் மழை காரணமாக மெரினா கடற்கரையின் மணல் பரப்பில் தேங்கி நின்ற மழைநீர்.
பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் குலம் போல மாறிய மெரினா கடற்கரை அணுகு சாலையில் மிதக்கும் கடைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.