கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்த சேவையாற்றிய ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவிப்பு.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அவரது மனைவி லீலா கபீருக்கு வழங்கி கெளரவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.பொது விவகாரங்களுக்கான பத்ம பூஷன் விருதை டாக்டர் எஸ்.சி. ஜமீருக்கு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
Advertisement
கலைக்காக குரு ஷஷாதர் ஆச்சார்யாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.மருத்துவத்துவத்தில் சிறந்து சேவையாற்றிய டாக்டர் யோகி ஏரோனுக்கு பத்மஸ்ரீ வருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
கலைக்காக பண்டிட் சன்னுலால் மிஸ்ராவுக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.சமூகப் பணிக்காக டாக்டர் அனில் பிரகாஷ் ஜோஷிக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கெளரவிப்பு.கலைக்காக திரு. மதன் சிங் சௌஹானுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கெளரவிப்பு.
வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்காக திரு. கஃபுர்பாய் எம். பிலாக்கியாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கெளரவிப்பு.திருமதி ஒய்னம் பெம்பெம் தேவிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினாக் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இந்திய பெண்கள் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 'இந்திய கால்பந்தின் துர்கா' என்றும் அழைக்கப்படுகிறார்.பொது விவகாரங்களான பத்ம விபூஷண் விருதினை, தனது தாயார் சார்பாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் வழங்கி கெளரவிப்பு.