மும்பையில் ரன்வீர்-தீபிகா திருமண வரவேற்பு
இத்தாலியில் ரன்வீர் சிங்-தீபிகா படுகோனெ பிரம்மாண்டத் திருமணத்தை செய்து கொண்டனர். இதையடுத்து பெங்களூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தீபிகா சிவப்பு நிற கவுனும், ரன்வீர் சிங் கோட், சூட்டும் அணிந்து வந்தனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அபிதாப் பச்சன், ஜெயா, ஸ்வேதா நந்தா, கரீனா கபூர், சயிப் அலி கான், அனுஷ்கா சர்மா, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின், வித்யா பாலன் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மனைவி அஞ்சலி மற்றும் மகன் அர்ஜூன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.