காஷ்மீர் ஆளுநருடன் பிடிபி குழுவினர் சந்திப்பு
ஜம்மு}காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவை, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) குழுவினர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
ஜம்மு}காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவை, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) குழுவினர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
பிடிபி மூத்த தலைவர் அப்துல் ரஹ்மான் வீரி தலைமையில் குலாம் நபி லோன், அஷ்ரஃப் மீர், மெஹபூபா பெக், நிஜாமுதீன் பட் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆளுநரை சந்தித்தனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து ஆளுநரிடம் அந்தக் குழுவினர் கவலை தெரிவித்தனர். மாநிலத்தில் வளம் மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனில், 35- ஏ சட்டப்பிரிவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆளுந
ரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.