FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தல்: பாஜக, சிவசேனை 2 இடங்களில் வெற்றி

மகாராஷ்டிர மாநில சட்டமேலவைத் தேர்தலில் 5 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக, சிவசேனை தலா 2 இடங்களில் வென்றுள்ளன.

Updated On : 25 மே 2018, 1:38 am IST
பகிர்:

மகாராஷ்டிர மாநில சட்டமேலவைத் தேர்தலில் 5 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக, சிவசேனை தலா 2 இடங்களில் வென்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை தக்க வைத்தது. காங்கிரஸ் கட்சி, போட்டியிட்ட 3 இடங்களிலுமே தோல்வி கண்டது.
மகாராஷ்டிரத்தில் 6 சட்டமேலவை இடங்களுக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல், எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட்டது.
இந்நிலையில், தேர்தல் நடைபெற்ற 6 இடங்களில், 5 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமராவதி மற்றும் வார்தா-சந்திரபூர்-கட்சிரோலி ஆகிய இரு இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
இதேபோல், சிவசேனை கட்சி நாசிக் மற்றும் பர்பானி-ஹிங்கோலி ஆகிய இரு இடங்களில் வெற்றி கண்டது. இரு இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ், ராய்கட்-ரத்னகிரி-சிந்துதுர்க் இடத்தில் வென்ற நிலையில், நாசிக்கில் சிவசேனையிடம் வீழ்ந்தது. காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட வார்தா-சந்திரபூர்-கட்சிரோலி, பர்பானி-ஹிங்கோலி, அமராவதி ஆகிய 3 இடங்களிலுமே தோல்வி கண்டது.
பீட் மாவட்ட உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் சிலரை இடைநீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், உஸ்மனாபாத்-பீட்-லாதூர் இடத்துக்கான வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments