சமுதாய பிரிவினையைத் தூண்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: சபரிமலை விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு
சமுதாய பிரிவினையைத் தூண்டும் வகையில் சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூர்: சமுதாய பிரிவினையைத் தூண்டும் வகையில் சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்தில் இந்த ஆண்டுக்கான விஜய தசமி விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
மத்தியில் அரசாங்கங்கள் மாற்றியமைந்தாலும் நமது எல்லைகள் மீதான தாக்குதலை அண்டை நாடுகள் நிறுத்துவதில்லை.
Advertisement
Advertisement
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுவழியிலான வழிபாட்டு முறைகளை எதிர்க்கிறது. அதேசமயம் முற்றுமுழுதான சமுதாய பிரிவினையை ஏற்கிறது
விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்,
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.