இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது: மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி
இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புது தில்லி: இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 306 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாவது:
ஒன்றிணைந்து நாம் வளர்வோம்
ஒன்றிணைந்து நாம் செழிப்படைவோம்
ஒன்றிணைந்து நாம் வலிமையான மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்தியாவை உருவாக்குவோம்.
இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. #இந்தியாவுக்கு வெற்றி
இவ்வாறு அவர் பதிவிட்டுளளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.