இந்தியா

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது: மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி 

DIN

புது தில்லி: இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 306 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாவது:

ஒன்றிணைந்து நாம் வளர்வோம்

ஒன்றிணைந்து நாம் செழிப்படைவோம்

ஒன்றிணைந்து நாம் வலிமையான மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்தியாவை உருவாக்குவோம்.

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.  #இந்தியாவுக்கு வெற்றி

இவ்வாறு அவர் பதிவிட்டுளளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT