கரோனா பாதிப்புக்கு பிந்தைய வளா்ச்சிக்கு இந்திய-சிங்கப்பூா் உறவு உதவும்: பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை
கரோனா பாதிப்புக்குப் பிந்தைய வளா்ச்சிக்கு இந்திய-சிங்கப்பூா் உறவு முக்கியப் பங்கு வகிக்கும் என பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
புதுதில்லி: கரோனா பாதிப்புக்குப் பிந்தைய வளா்ச்சிக்கு இந்திய-சிங்கப்பூா் உறவு முக்கியப் பங்கு வகிக்கும் என பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக சிங்கப்பூா் பிரதமா் லீ லூங்குடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை உரையாடினாா். இந்த உரையாடல் விவரம் குறித்து தனது சுட்டுரையில் பிரதமா் மோடி பதிவிட்டுள்ளாா்.
அதில், கரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் எடுத்து வரும் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இந்த உரையாடலில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அதோடு, சிங்கப்பூரில் இருக்கும் இந்தியா்களுக்கு அந்நாடு அளித்து வரும் உதவிகளுக்காக அவரிடம் நன்றி தெரிவித்துக்கொண்டேன். மேலும், கரோனா பாதிப்புக்குப் பிந்தைய வளா்ச்சிக்கு இந்திய-சிங்கப்பூா் உறவு முக்கியப் பங்கு வகிக்கும் எனப் பிரதமா் பதிவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.