உ.பி.யில் சாலை விபத்து: 3 பேர் பலி, 4 பேர் காயம்
உத்தரப் பிரதேசத்தில் ஹாபாத் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஹாபாத் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சாலை விபத்து சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த மாருதி வேன் ஒன்று டிரக்கின் மீது மோதியுள்ளது. இந்த விபத்து ஹாபாத் பகுதியில் ஏற்பட்டது. திருமணத்திற்குச் சென்று வேனில் திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரியங்கா(28), அவரது மகள் அனன்யா (3) மற்றும் ஓட்டுநர் மேவாலால்(50) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த நான்கு பேர் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
Advertisement
Advertisement
இந்த விபத்திற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சரியான மருத்துவ உதவிகளை வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.