Three dead in truck-van collision in UP 
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: 3 பேர் பலி, 4 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் ஹாபாத் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

UNI

உத்தரப் பிரதேசத்தில் ஹாபாத் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த சாலை விபத்து சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த மாருதி வேன் ஒன்று டிரக்கின் மீது மோதியுள்ளது. இந்த விபத்து ஹாபாத் பகுதியில் ஏற்பட்டது. திருமணத்திற்குச் சென்று வேனில் திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரியங்கா(28), அவரது மகள் அனன்யா (3) மற்றும் ஓட்டுநர் மேவாலால்(50) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த நான்கு பேர் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். 

இந்த விபத்திற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சரியான மருத்துவ உதவிகளை வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

SCROLL FOR NEXT