இந்தியா

8.19 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

DIN


பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பி.பி.இ உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சோதனை ஆய்வகங்கள் மற்றும் கருவிகளுக்காக ரூ. 15,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புலம்பெயர் தொழிலாளர்கள் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு வழங்கியது. எஞ்சிய 15% தொகையை மாநில அரசுகள் வழங்கின.

20 கோடி ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ. 10,025 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 3,950 கோடி மற்றும் 6.81 கோடி மக்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 12 லட்சம் பி.எப் தொழிலாளர்களுக்கு அரசு பணம் செலுத்தியுள்ளது. 

8.19 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ. 2,000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT