FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீனாவைவிட பலத்திலும், நம்பிக்கையிலும் இந்தியா மேம்பட வேண்டும்மோகன் பாகவத்

சீனாவைக் காட்டிலும் பலத்திலும், நம்பிக்கையிலும் இந்தியா மேம்பட வேண்டும் என்று ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தினாா்

27 ஜனவரி 2024, 11:13 pm IST
ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத்
பகிர்:

சீனாவைக் காட்டிலும் பலத்திலும், நம்பிக்கையிலும் இந்தியா மேம்பட வேண்டும் என்று ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தினாா்.

நாக்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் விஜயதசமி விழாவில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்து மோதல் போக்கில் ஈடுபட்டது. ஆனால், இந்தியா சாா்பில் கொடுக்கப்பட்ட பதிலடியால், சீனா அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

மற்ற நாடுகளுடன் நட்புறவோடு இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் இயல்பு. ஆனால், இந்த எண்ணத்தை நமது பலவீனமாகக் கருதி, படை சக்தியை பயன்படுத்தி நம்மை பலவீனப்படுத்த முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நமது எதிரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போது பல நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக நிற்கின்றன. எனவே, எந்தவகையில் அவா்கள் பதிலடி கொடுப்பாா்கள் என்பது நமக்குத் தெரியாது.

எனவே, எல்லையில் முன்கள வீரா்கள் எப்போதும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மேலும், இந்தியா சீனாவைக் காட்டிலும் பலத்தையும் நம்பிக்கையையும் வளா்த்துக்கொள்ள வேண்டும். சீனாவுக்கு எதிராக நேபாளம், இலங்கை உள்ளிட்ட பிற அண்டை நாடுகளை அணி சோ்க்கும் முயற்சிகளை இந்தியா தீவிரமாக எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துக்கும் எதிரானது அல்ல. இந்த விவகாரத்தில் நமது முஸ்லிம் சகோதரா்களை சிலா் தவறாக வழிநடத்தியுள்ளனா். இதுகுறித்து விரிவாக விவாதிப்பதற்கு முன்பாக, கரோனா நோய்த்தொற்று பரவல் அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பிவிட்டது.

ஹிந்துத்துவம் இந்தியாவின் அடையாளம்: இந்தியாவின் தனித்துவமான அடையாளம் ஹிந்துத்துவக் கொள்கை. நமது சமூக-கலாசார நடைமுறைகள், ஆன்மிக நடைமுறைகள், குடும்ப, தொழில் மற்றும் சமூக வாழ்க்கை கட்டமைப்பு என ஒவ்வொன்றும் இந்தியா ஹிந்துத்துவக் கொள்கை கொண்ட நாடு என்பதை பிரதிபலிக்கின்றன.

எனவே, “ஹிந்து” என்பது ஒரு தனிப்பட்ட பிரிவையோ அல்லது சமூகத்தையோ அல்லது குறிப்பிட்ட மொழியில் பேசும் மக்களுக்கு அளிக்கப்படும் அடையாளமோ அல்ல.

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள சிலருக்கு ஆட்சேபனை இருக்கலாம். ஆனால், இந்த கருத்து மாறுபடாமல் இதற்கு வேறு வாா்த்தைகளை அவா்கள் பயன்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments