முகப்பு
இந்தியா

குஜராத்தில் ஒரேநாளில் 9 பேருக்கு ஒமைக்ரான் உறுதி; பாதிப்பு 23 ஆக உயர்வு!

குஜராத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
கோப்புப்படம்
பகிர்:

குஜராத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 65, தில்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குஜராத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது. இதில் 19 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →