தில்லியில் கரோனா 3-ம் அலை உருவானால்? 
இந்தியா

தில்லியில் கரோனா 3-ம் அலை உருவானால்?

தில்லியில் கரோனா மூன்றாம் அலை உருவானால், நாள்தோறும் 45,000 கரோனா பாதிப்பும், 9000 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐஐடி தில்லி கணித்துள்ளது

DIN


புது தில்லி: தில்லியில் கரோனா மூன்றாம் அலை உருவானால், நாள்தோறும் 45,000 கரோனா பாதிப்பும், 9000 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐஐடி தில்லி கணித்துள்ளது.

இது குறித்த ஆய்வறிக்கை தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா பெருந்தொற்றின் 3ஆம் அலை உருவானால் தில்லிக்கு நாள் ஒன்றுக்கு 944 டென் ஆக்ஸிஜன் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, முதல் கரோனா அலையின்போது அதிகபட்சமாக ஒரு நாளில் 28 ஆயிரம்  பேருக்கும், 2வது அலையின்போது ஒரு நாளில் 36 ஆயிரம் பேருக்கும் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், 3-ஆம் அலையானது 45 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 9 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று புள்ளி விவரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ஐஐடி தில்லி தெரிவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், தில்லியில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவேளை மூன்றாம் அலை உருவானால் அது எப்படி இருக்கும் என்பதை, கடந்த இரண்டு கரோனா அலைகளில் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஐஐடி தில்லி உருவாக்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் 80 கி.மீ. வேகத்தில் சென்றால் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல் ஒலிக்கும்! எங்கு தெரியுமா?

தள்ளிப்போகும் நானியின் தி பாரடைஸ் பட வெளியீடு!

நமீபியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்!

நேபாளத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தாலி அபார வெற்றி!

SCROLL FOR NEXT